Home முக்கியச் செய்திகள் யாழ்ப்பாணத்தில் பயங்கரம் : இளம் தாய் கத்தியால் குத்தி படுகொலை

யாழ்ப்பாணத்தில் பயங்கரம் : இளம் தாய் கத்தியால் குத்தி படுகொலை

0

யாழ்ப்பாணம் (Jaffna) – கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர்
கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது கொழும்புத்துறை ஏவீ வீதி மூன்றாம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றிலேயே  இடம்பெற்றது.

இதன்போது, திவிகரன் நிஷானி என்ற 29 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கணவர் கைது

இந்தநிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணின் கணவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/woman-stabbed-to-death-in-jaffna-1720275480?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version