Home இலங்கை சமூகம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு ஆசைக்காட்டி ஏமாற்றிய பெண்

இலங்கையர்களுக்கு வெளிநாட்டு ஆசைக்காட்டி ஏமாற்றிய பெண்

0

இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 20 மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த பெண்ணை கம்பஹா சிறப்பு புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.

வெயங்கொட பகுதியை சேர்ந்த அவர், பல்வேறு நபர்களிடமிருந்து 3 மில்லியன், 4 மில்லியன் மற்றும் 5 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜப்பான், நியூசிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தப் பணத்தை மோசடி செய்துள்ளார்.


முறைப்பாடுகள்

இந்தப் பெண்ணுக்கு எதிராக இதுவரை 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடம் இருந்து 24 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும் கைப்பற்றப்பட்டன.

NO COMMENTS

Exit mobile version