Home இலங்கை அரசியல் அடேய் அர்ச்சுனா…!! சபையில் பொறுமையிழந்து கத்திய அமைச்சர்

அடேய் அர்ச்சுனா…!! சபையில் பொறுமையிழந்து கத்திய அமைச்சர்

0

நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருமையில் இல்லை, தேவையேற்பட்டால் கீழ்மையிலும் விழிப்பேன் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலக
கேட்போர் கூடத்தில் இன்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைப்பெற்றது.

இதன்போது, திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளிடையே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்ப முற்பட்ட போது அவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.

ஊடகவியலாளர்களின் கேள்வி 

இதனை குறித்த சந்தர்ப்பங்களில் “அடேய் அர்ச்சுனா” மற்றும் “நிப்பாட்டு டா குமரன்” எனும் சொற்களை நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி கடற்றொழில் அமைச்சர்
விழித்தார். 

தொடர்ந்து சபையினை கட்டுபடுத்த முடியாத நிலையில் யாழ். மாவட்ட செயலரின் மூலம்
குறித்த கூட்டத்தினை நிறைவு செய்வதாக தெரிவித்து கூட்டத்தினை இடையில்
இடைநிறுத்தினார்.

இந்நிலையில், தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களால் பின்வருமாறு கேள்வி
எழுப்பபப்ட்டது.

ஒரு அமைச்சராக இருந்த வண்ணம் நாடாளுமன்ற உறுப்பினரை இவ்வாறு
விழிக்கலாமா?, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூட உங்களுக்கு முறையான
தலைமைத்துவம் இல்லை என குற்றம் சுமத்தியுள்ளார், என வினவபட்டது.

கீழ்மையிலும் விழிப்பேன்..

இன்று இந்த கூட்டத்தினை நடாத்த அர்ச்சுனா எமது அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி
தேவையற்ற பல விடயங்களை இணைத்து அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை தேவையேற்பட்டால் ஒருமையில், பன்மையிலும்
கீழ்மையிலும் விழிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து எதிர்வரும் காலங்களில் ஒழுங்காக தலைமைத்துவத்துடன்
நடைமுறைகளை எடுப்பீர்களா என வினவிய பொழுது, நடவடிக்கைகளை எடுக்க
முயற்சிக்கின்றேன் என தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version