Home இலங்கை சமூகம் யாழில் போதைக்கு அடிமையான யுவதி எடுத்த தவறான முடிவு

யாழில் போதைக்கு அடிமையான யுவதி எடுத்த தவறான முடிவு

0

யாழ்ப்பாணம் சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர்
தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச்
சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என
தெரியவருகிறது. இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு
முயற்சித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி

இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி நேற்றையதினம்
(20) உயிரிழந்துள்ளார்.

 அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை சாவகச்சேரி காவல்துறையினர் நெறிப்படுத்தினர்

NO COMMENTS

Exit mobile version