Home இலங்கை குற்றம் கனடாவுக்கு தப்பிச்செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த இளைஞர் கைது

கனடாவுக்கு தப்பிச்செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த இளைஞர் கைது

0

போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை அமலாக்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சவூதி அரேபியாவின் தம்மாம் நோக்கிச்செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-263 இல் செல்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில் கனடாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

18 இலட்சம் ரூபா பணமோசடி

குடிவரவுத் துறையின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகநபரை தடுத்து நிறுத்தி கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை சரிபார்த்துள்ளனர்.

 

இதன்போது குறித்த கடவுச்சீட்டு கனேடிய வீசாவைக் கொண்டுள்ள மற்றுமொரு இலங்கையருடையது எனவும் தெரியவந்துள்ளது.

18 இலட்சம் ரூபா பணத்தினை தரகர் ஒருவரிடம் கொடுத்து, தனது புகைப்படம் மற்றும் பிற அடிப்படைத் தகவல்களை கடவுச்சீட்டில் இணைத்து, இந்த கடவுச்சீட்டை போலியாக தயாரித்துள்ளதாக குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version