Home இலங்கை அரசியல் யோஷிதவின் விடுதலை : அநுர அரசின் பாரபட்சம்

யோஷிதவின் விடுதலை : அநுர அரசின் பாரபட்சம்

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) புதல்வர் யோஷித ராஜபக்ச (Yoshitha Rajapaksa) கடந்த 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் மகிழ்ச்சியான மனநிலையில் அமர்ந்திருக்கும் அவரின் புகைப்படம் வெளியாகியது.

குறித்த புகைப்படம் சமூக ஊடகங்கள் உட்பட அரசியல் வட்டாரதத்தில் பாரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், கைது செய்யப்பட்ட பிற சந்தேக நபர்களுக்கும் இதே போன்ற வசதிகளை வழங்க வேண்டும் என்றும், கைதுக்குப் பிறகு போக்குவரத்துக்கு குளிரூட்டப்பட்ட வான்களைப் பயன்படுத்துமாறும் தொடர் விமர்சனங்கள் முன்வகை்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், இது தொடர்பில் மக்கள் ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய மக்கள் கருத்து நிகழ்ச்சி,

            

https://www.youtube.com/embed/qia53qxQzbs

NO COMMENTS

Exit mobile version