யாழில் (Jaffna) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் மந்திகை – மடத்தடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் வடமராட்சி – அல்வாய் கிழக்கை சேர்ந்த பிரபாகரன் பிரணவன் (வயது 23) என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ். போதனா மருத்துவமனை
உயிரிழந்த இளைஞர் கடந்த சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில்
பயணித்த போது மந்திகை – மடத்தடி பகுதியில் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானார்.
இதில் படுகாயமடைந்த அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
