Home இலங்கை குற்றம் தம்பியின் முன்கோபம் காரணமாக அண்ணன் உயிரிழப்பு

தம்பியின் முன்கோபம் காரணமாக அண்ணன் உயிரிழப்பு

0

முன்கோபம் கொண்ட இளைஞன் ஒருவர், சடுதியான ஆவேசம் காரணமாக தனது மூத்த சகோதரரை கூரிய கத்தரியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

இரத்தினபுரி (Ratnapura) மாவட்டத்தின் குருவிட்ட பிரதேசத்தில் இன்று (29.04.2024) காலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

17 மற்றும் 19 வயதான உடன்பிறந்த சகோதரர்களான இளைஞர்கள் இருவருக்கு மத்தியில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கோபமடைந்த இளைஞன், கூரிய கத்தரியினால் தனது மூத்த சகோதரரை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்: காணொளி ஆதாரம்

சந்தேகநபர் கைது

இதனையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 19 வயதான மூத்த சகோதரன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய இளைஞர் குருவிட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

பிள்ளையானின் நெருங்கிய சகா கஜன் மாமாவின் உடல் எரிக்கப்பட்டதில் வலுக்கும் சந்தேகம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version