யாழில் (Jaffna)ஹெரோயின் உட்பட ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 25 வயதிற்குட்பட்ட யுவதி உட்பட இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரகசிய தகவல்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஒன்பது கிராம் கொரோயின்
மற்றும் ஐஸ் போதைபொருட்களுடன் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
