Home முக்கியச் செய்திகள் யாழில் இரவுநேரம் கைது செய்யப்பட்ட இளைஞன்

யாழில் இரவுநேரம் கைது செய்யப்பட்ட இளைஞன்

0

 கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு,யாழ்ப்பாணம் கலட்டிப் பகுதியில் வைத்து 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது
செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம்
போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை

விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version