யாழ். தாவடியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 21 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 400 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து
விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
விசாரணைகளின் பின்னர் அவரை
மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
