Home இலங்கை சமூகம் யாழில் பெருமளவு போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்

யாழில் பெருமளவு போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பெருமளவு போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் வைத்து இன்றையதினம் (20) 27 வயதுடைய குறித்த இளைஞன் கைதாகியுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 290 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது நடவடிக்கை

மானிப்பாய் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்
அடிப்படையில், மானிப்பாய் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி  G.J.குணதிலகவின் கீழ் இயங்கும் காவல்துறை குழுவினரால் இந்த கைது நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞனை மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version