வவுனியா- கனகராயன்குளம் குளத்தில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம் (27) நடைபெற்றுள்ளது.
சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த ம. ஈழவன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இந்த இளைஞன் இன்று மாலை கனகராயன்குளப் பகுதியில் மீன்பிடிப்பதற்காக
சென்ற போதே குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பாக கனகராயன் குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
