Home இலங்கை சமூகம் யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி

யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி

0

யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் (Jaffna) – சிவலிங்கப் புளியடியைச் சேர்ந்த செ.பிரசாந்தன் (வயது 26) என்பவரே நேற்றுமுன்தினம் (19.07.2025) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 5 வருடங்களாக ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை

இந்நிலையில் நேற்றுமுன்தினம் (19) மயக்தமடைந்த நிலையில் வீட்டில் காணப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார். 

செய்திகள் :  கஜிந்தன் 

NO COMMENTS

Exit mobile version