யாழில் உணவு அருந்திவிட்டு இருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(17) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் பழைய தொடருந்து நிலைய வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் எனோ அசாந்
(வயது 20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் இன்றையதினம் தனது வீட்டில் கேக் மற்றும் தேநீர் என்பன
உட்கொண்டு சிறிது நேரத்தில் மயக்கமுற்றுள்ளார்.
பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.
மேலும், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
