Home இலங்கை சமூகம் புதுக்குடியிருப்பில் மாடு குறுக்கிட்டதால் ஏற்பட்ட விபத்து! படுகாயமடைந்த இளைஞன்

புதுக்குடியிருப்பில் மாடு குறுக்கிட்டதால் ஏற்பட்ட விபத்து! படுகாயமடைந்த இளைஞன்

0

புதுக்குடியிருப்பு (Puthukkudiyiruppu) சந்திக்கு அண்மித்த பகுதியில், மாடொன்று வீதியை குறுக்கிட்டதனால் விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தானது புதுக்குடியிருப்பு சூசையப்பர் ஆலய சந்தி-ஒட்டிசுட்டான் வீதியில் இன்று
(24) மாலை 5.30 மணியளவில்
இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஒட்டிசுட்டான் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி வேகமாக சென்ற
மோட்டார் சைக்கிளை திடீரென மாடு ஒன்று குறுக்கறுத்து சென்றுள்ளது.

இளைஞன் படுகாயம்

இதன்
போது, வேக கட்டுபாட்டினை இழந்த இளைஞனின் மோட்டார் சைக்கிள்
புதுக்குடியிருப்பில் இருந்து எதிரே ஒட்டிசுட்டான் நோக்கி சென்று கொண்டிருந்த
காரின் மீது
மோதியுள்ளது.

இதனையடுத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில்
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

இந்த சம்பவத்தில் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 30
வயதுடைய இளைஞனே காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version