Home இலங்கை அரசியல் ரணில் கைது! யூடியூபரின் கணிப்பு தொடர்பில் சஜித் கவலை

ரணில் கைது! யூடியூபரின் கணிப்பு தொடர்பில் சஜித் கவலை

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கைது செய்யப்படுவதற்கு முன்பே, இலங்கையைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் அவர் கைது செய்யப்படுவார் என்று கணித்திருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கைது

மேலும், பிரேமதாச அந்தக் கணிப்பு தற்செயலானதா அல்லது திட்டமிடப்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த அறிக்கையில்,

“முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்படுவார் என்று யூடியூபர் ஒருவர் கணித்தாரா? அது தற்செயலாக நடந்திருக்க முடியாது.

திட்டமிடப்பட்டிருக்க முடியுமா? உண்மையாக இருந்தால், சட்டம் ஒழுங்கு போன்ற புனிதமான ஒன்று மலிவான நாடகமாக குறைக்கப்படும் ஒரு சோகமான நாள் என குறிப்பிட்டுள்ளார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் – கொடியிறக்கம்

NO COMMENTS

Exit mobile version