Home இலங்கை குருவிட்ட மற்றும் பல்லன்சேனவில் பதற்றம்: பாதுகாப்புப் பணியில் முப்படையினர் குவிப்பு!

குருவிட்ட மற்றும் பல்லன்சேனவில் பதற்றம்: பாதுகாப்புப் பணியில் முப்படையினர் குவிப்பு!

0
image

இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன திறந்தவெளிச் சிறை முகாம் ஆகிய இடங்களில் இன்று (07) கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட திடீர் அமைதியின்மைச் சம்பவங்கள் தொடர்பாகப் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம் இரு சிறை வளாகங்களிலும் கைதிகள் திடீரென அமைதியின்மையில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. நிலைமையை உடனடியாகச் சீர்செய்யும் பொருட்டு, இலங்கை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) விரைவாகக் வரவழைக்கப்பட்டு, சிறை அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து, மீண்டும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதவண்ணம் தடுக்கும் நோக்கில், இரு சிறைச்சாலைகளையும் சூழ இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினர் அடங்கிய பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமைதியின்மைக்கான மூலக் காரணம் மற்றும் பின்னணி குறித்துச் சிறைச்சாலைத் திணைக்களம் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.

Source: https://samugammedia.com/tension-in-kuruvitta-and-pallansena-tri-forces-deployed-for-security-duty-1786116231

NO COMMENTS

Exit mobile version