Home இலங்கை சந்தேகநபர்களை சோதனையிடும்போது துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

சந்தேகநபர்களை சோதனையிடும்போது துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

0
image

கொழும்பு – பிலியந்தல, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரு நபர்களை சோதனையிட முயன்றபோது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றதாக பிலியந்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது மற்றொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/gunshot-while-questioning-suspects—one-person-injured-1784436544

NO COMMENTS

Exit mobile version