Home இலங்கை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்!

0
image

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சம்பத் குமார சிறப்புப் பிரிவில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கும், 

தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய கித்சிறி ஜயலத் சப்ரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் வருண ஜயசுந்தர சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கு மேலதிகமாக, பயிற்சி மற்றும் உயர் பயிற்சிப் பதவியின் பதில் கடமையாற்றுவதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சிறப்புப் பாதுகாப்புப் பதவியில் இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் கே.பி. கருணாரத்ன அப்பதவியில் இருந்து வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த புத்திக சிறிவர்தன தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதைத் தவிர, 6 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக இருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா, பொலிஸ் களப் படைப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source: https://samugammedia.com/top-police-officers-transferred-to-several-places-1786169132

NO COMMENTS

Exit mobile version