Home இலங்கை டெங்கு நோயிலிருந்து திருகோணமலையை பாதுகாக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை..!

டெங்கு நோயிலிருந்து திருகோணமலையை பாதுகாக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை..!

0
image

டெங்கு நோயிலிருந்து திருகோணமலையை பாதுகாப்பது தொடர்பான கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. 

பிரதி அமைச்சர் மற்றும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அருண் ஹேமச்சந்திரா அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை  (30) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற டெங்கு பணிக்குழு கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

இக்கூட்டம் மாவட்டச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை, உள்ளூராட்சி மன்றங்கள், பொது நிர்வாக அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர், பொலிஸார் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய அரச துறைகளின் பங்கேற்புடன், நேரடி மற்றும் இணைய வழி இணைந்த முறையில் நடைபெற்றது.

டெங்கு வைரஸ் வகைகள் மாறிவரும் நிலை, நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான மாற்றங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் Aedes aegypti நோய் பரப்பி அதிகரித்திருக்கும் நிலை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, மாவட்ட மட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

டெங்கு கட்டுப்பாடு என்பது சுகாதாரத் துறையின் பொறுப்பு மட்டும் அல்ல. அனைத்து நிறுவனங்களின், உள்ளூராட்சி மன்றங்களின் மற்றும் ஒவ்வொரு சமூகத்தின் செயற்பாட்டு பங்களிப்பும் அவசியமானதாகும்.

காலத்திற்கேற்ற நடவடிக்கைகள், பொதுமக்கள் விழிப்புணர்வு, தொடர்ச்சியான சுத்தம், முறையான கழிவு முகாமைத்துவம், கொசு பெருகும் இடங்களை அகற்றுதல் மற்றும் அனைத்து மட்டங்களிலும் வலுவான ஒருங்கிணைப்பு மூலம் இந்த அபாயத்தை குறைக்க முடியும்.

Source: https://samugammedia.com/coordinated-effort-to-protect-trincomalee-from-dengue-1782818956

NO COMMENTS

Exit mobile version