Home இலங்கை தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவிகள் மூவர் மாயம் – பொலிஸில் முறைப்பாடு

தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவிகள் மூவர் மாயம் – பொலிஸில் முறைப்பாடு

0
image

 

பலாங்கொடை – பின்னவல, எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவிகள் மூவர் காணாமல் போயுள்ளதாக பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவிகள் தனியார் வகுப்புகளுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக அவர்களின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய மூவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காணாமல் போன மாணவிகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தின் 045 228 7222 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது பெற்றோரின் 076 707 0913 / 077 165 8788 என்ற இலக்கங்களுக்கோ தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Source: https://samugammedia.com/three-students-who-went-to-a-private-class-go-missing—complaint-filed-with-the-police-1788240034

NO COMMENTS

Exit mobile version