பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் அன்று தங்களது உயிர்களை தியாகம் செய்தது, இந்த நாட்டின் ஜனநாயக உரிமைகளையும், பேச்சுரிமையையும், பல்கலைக்கழகங்களுக்குள் நிலவ வேண்டிய கல்விசார் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்காகவே ஆகும் என்று விரிவுரையாளர் இந்திக தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றில் காவல்துறை தலையீடு கோரப்பட்ட ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தையும், அதன் விளைவாக மாணவர் ஒருவர் (பத்மசிறி கொன்னவெல) படுகொலை செய்யப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், தற்போதைய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சூழல் குறித்து பேசுகையில், இது ஒரு விமர்சனமாக அல்லாமல், அன்றைய சூழலின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதற்காகவே தாம் இதனைப் பகிர்ந்துகொள்வதாகக் குறிப்பிட்டார்.
மாணவர்கள் அன்று நடத்திய போராட்டங்கள் அனைத்தும், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கும், பல்கலைக்கழகத்திற்குள் சுதந்திரமான கருத்துப் பரிமாற்றங்களை நிலைநிறுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டவை என்பதை அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
