யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காணியின் உரிமையாளர் தனது காணியை சுற்றம் செய்யும்போது, மண்ணில் புதைந்திருந்த சந்தேகத்திற்கிடமான பொருளை அவதானித்துள்ளார்.
பின்னர் அது கைக்குண்டாக இருக்கலாம் என சந்தேகமடைந்த அவர் உடனடியாக இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த பகுதியை ஆய்வு செய்தனர்.
அந்த கைக்குண்டானது நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டு நாளையதினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Source: https://samugammedia.com/hand-grenade-recovered-in-madakkal-field-1783519298
