நாட்டில் மின்சார விநியோகம் தடையின்றித் தொடர்வதற்கு எந்தவித தடையும் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளுக்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி தொடர்ச்சியாக கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அனுர கருணாதிலக மேலும் தெரிவித்துள்ளார்.
