மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான் இரானுவ முகாமுக்கு முன்னாள் உள்ள வீதியில் கடற்படை பஸ் உற்பட மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (14) இடம்பெற்றது.
இதில் எவருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Source: https://samugammedia.com/accident-involving-three-vehicles-1789389856
