Home இலங்கை யாழ்ப்பாணம், கொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

யாழ்ப்பாணம், கொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

0
image

இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று(15) இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – கச்சேரியடியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் காலை 9 மணியளவில் இந்திய தேசியக் கொடியை துணைத் தூதர் சாய் முரளி ஏற்றிவைக்க சுதந்திர தின நிகழ்வு ஆரம்பமாகியது.

அதனைத் தொடர்ந்து, இந்திய குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் சாய் முரளி வாசித்தார்.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை இந்திய சுதந்திர தினம் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

Source: https://samugammedia.com/india-independence-day-events-were-celebrated-prominently-in-jaffna-and-colombo-1786776846

NO COMMENTS

Exit mobile version