Home இலங்கை சமூகம் யாழில் தந்தை கைப்பேசி கொடுக்காததால் தவறான முடிவெடுத்த 13 வயது சிறுவன்!

யாழில் தந்தை கைப்பேசி கொடுக்காததால் தவறான முடிவெடுத்த 13 வயது சிறுவன்!

0

யாழ்ப்பாணத்தில் தொலைப்பேசியில் விளையாடுவதற்கு தந்தை கைப்பேசி கொடுக்காததால் 13 வயதுச் சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்துள்ளான்.

குறித்த சம்பவமானது இன்று(15) இரவு நடைபெற்றுள்ளது.

அந்தோனியார் சேர்ச் வீதி, பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த மேர்வின் டயஸ் சிந்துஜன் (வயது 13) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

தவறான முடிவெடுத்த சிறுவன்

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவனுக்கு அவனது தந்தை கைப்பேசியை கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவன் வீட்டின் அறையில் தூக்கிட்டு தவறான முடிவெடுத்துள்ளான்.

அவனது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version