Home இலங்கை இலங்கையில் இருந்து வெளியேறிய 1500 மருத்துவ நிபுணர்கள்

இலங்கையில் இருந்து வெளியேறிய 1500 மருத்துவ நிபுணர்கள்

0

 2022 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில்,இலங்கையின் 1,489 மருத்துவர்கள்
நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதன் காரணமாக, நாடு மூளை வெளியேற்றத்துக்கு முகங்கொடுத்ததுள்ளதுடன், அரசுக்கு 12.5 பில்லியன் ரூபாய் அதாவது 41.5 மில்லியன் டொலர் நிதி
இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

1,085 மருத்துவர்கள் 

பிரித்தானியாவை தளமாகக்கொண்ட அமைப்பு ஒன்றை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போது, இலங்கையின் சுகாதாரத்துறையில் 2,800 நிபுணர்கள் உட்பட
சுமார் 23,000 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர்.

அதேநேரம் 1,085 மருத்துவர்கள் சிறப்பு வெளிநாட்டுப் பயிற்சியைப் பெற்று
வருகின்றனர் என்று குறித்த பிரித்தானிய அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version