Home இலங்கை அரசியல் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள 18 புதிய நியமனங்கள்!

ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள 18 புதிய நியமனங்கள்!

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.

இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

நியமனங்கள் 

விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும், சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரச தரப்பு சட்டத்தரணி ஒருவரும் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது உறுப்புரிமையின் (2) ஆவது உப பிரிவின் படி, ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version