Home முக்கியச் செய்திகள் முல்லைத்தீவில் தனியார் நிறுவனம் ஒன்றில் இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவில் தனியார் நிறுவனம் ஒன்றில் இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

0

முல்லைத்தீவு (Mullaitivu)- புதுக்குடியிருப்பு நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்
மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் ஆபத்தான நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (26.06.2024) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த சம்பவம்
தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

புதுக்குடியிருப்பு சந்தி பகுதியில் அமைந்துள்ள LOLC தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் குறித்த நிறுவனத்தின் தண்ணீர் தொட்டியினை
சுத்திகரிக்க கட்டட மேல்பகுதிக்கு சென்றபோது அதியுயர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.

மேலதிக சிகிச்சை

இந்தநிலையில், மேலே சென்றவரை காணவில்லை என அருகில்
உள்ள பலசரக்கு கடையில் பணிபுரியும் ஊழியர் கட்டட மேற்பகுதிக்கு சென்றபோது
குறித்த இளைஞனுக்கும் மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து தூக்கி கீழே
வீசப்பட்டார்.

இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக
புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேலதிக
சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

குறித்த சம்பவத்தில் வேணாவில் மற்றும் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை
சேர்ந்த 20 வயதுடைய இரு இளைஞர்களே பாதிக்கப்பட்டவர்களாவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version