Home உலகம் இன்று பூமியை கடக்கவுள்ள பாரிய சிறுகோள்… உற்று நோக்கும் விஞ்ஞானிகள்…!

இன்று பூமியை கடக்கவுள்ள பாரிய சிறுகோள்… உற்று நோக்கும் விஞ்ஞானிகள்…!

0

2025 BS4 எனப்படும் ஒரு பாரிய சிறுகோள் இன்று (28) பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சிறுகோளானது பூமியில் இருந்து சந்திரனுக்கான தூரத்தை விட இரண்டு மடங்கு தொலைவில் இருப்பதனால் பூமியை மோதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அபாயங்களை மதிப்பிடுவதற்காக விஞ்ஞானிகள் பூமிக்கு அருகிலுள்ள இதுபோன்ற பொருட்களை தொடர்ந்து அவதானித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

பாரிய சிறுகோள்

அத்துடன், இந்த சிறுகோளானது ஒரு தோட்டாவின் வேகத்தை விட 10 மடங்கு வியக்கத்தக்க வேகத்தில் பயணிப்பதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, மணிக்கு 35,000 மைல் வேகத்தில் பயணிக்கும் என்றும் இந்த சிறுகோள் 970,000 பவுண்டுகளுக்கும் அதிகமான எடை கொண்டது என்று தெரிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version