Home இலங்கை சமூகம் யாழில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

யாழில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

0

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 22 கிலோகிராம் கேரள கஞ்சா காவல்துறையினரால் இன்றையதினம்(11) கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டது.

மேலதிக விசாரணை

காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 10 பொதிகளில் 22 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கைப்பற்ற கஞ்சாவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறையினர், சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/22-kilograms-of-kerala-ganja-seized-by-jaffna-1718118917

NO COMMENTS

Exit mobile version