Home முக்கியச் செய்திகள் கணவன் மற்றும் பிள்ளையுடன் சென்ற இளந்தாய்க்கு நேர்ந்த பரிதாபம்

கணவன் மற்றும் பிள்ளையுடன் சென்ற இளந்தாய்க்கு நேர்ந்த பரிதாபம்

0

ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளும் ஜீப் வண்டியும் மோதிய விபத்தில் இளந்தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை (Kalutara) – ஹொரண பொரலுகொட முதலீட்டு வலயத்திற்கு மாறும் சந்திக்கு அருகில் நேற்றையதினம் (24) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரணை, வடக்கு உடுவையில் வசித்து வந்த கே. ஜி. கிஹிம்ஹானி என்ற 26 வயதான ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் ஆவார்.

விபத்து சம்பவம்

உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் மூன்று வயது மகளுடன் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

ஹொரணை, வடக்கு உடுவ பகுதியில் இருந்து இரத்தினபுரி வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் பொரலுகொட முதலீட்டு வலயத்திற்கு முன்பாக வீதியின் மத்திய கோட்டில் நிறுத்தி வலப்புறம் திரும்ப தயாராக உள்ளது.

இதன் போது, ​​ஹொரணையில் இருந்து இரத்தினபுரி நோக்கி பொருட்களை விநியோகிக்கச் சென்ற பொலேரோ ஜீப் ஸ்கூட்டரின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

கைது நடவடிக்கை

விபத்தில் மனைவி உயிரிழந்துள்ளதுடன், தந்தையும் மகளும் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version