யாழில் (Jaffna) தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளது.
கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் சேர்ந்த அழகேஸ்வரன் அஜந்திகா (வயது 27)
என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும தெரியவருகையில், யுவதியின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை
மேற்கொண்டுள்ளார்.
பிரேத பரிசோதனை
இதையடுத்து, சாட்சிகளை நெல்லியடி காவல்துறையினர் நெறிப்படுத்தியுள்ளனர்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
