Home முக்கியச் செய்திகள் யாழில் சுகாதார சீர்கேடுடன் இயங்கிய உணவகங்கள்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள்

யாழில் சுகாதார சீர்கேடுடன் இயங்கிய உணவகங்கள்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள்

0

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களுக்கு அரக்கு முத்திரை(சீல்) வைக்கப்பட்டுள்ளதுடன் 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகரால் உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டு குறைபாடுகள் இனங்காணப்பட்ட உணவகங்களுக்கு திருத்த வேலைகளுக்கான அறிவுறுத்தல்கள் எழுத்து மூலமாக வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் திருத்த வேலைகள் பூர்த்தியானமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் மீள் பரிசோதனை கடந்த(25) அன்று மேற்கொள்ளப்பட்டது.

மற்றுமொரு விமான சேவை ஆரம்பம்: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்

வழக்கு விசாரணை

இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொள்ளாது கவனயீனமாக தொடர்ந்தும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்கள் பரிசோதனையில் சிக்கியுள்ளன.

இதனையடுத்து மூன்று உணவகங்களுக்கும் எதிராக திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகரால் மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு

திருத்த வேலைகள் 

வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் மூன்று உணவகங்களுக்கும் மொத்தமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்தமையுடன் மூன்று உணவகங்களையும் திருத்த வேலைகள் நிறைவடையும் வரை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு கட்டளையிட்டுள்ளார்.

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் சஞ்சீவனால் மூன்று உணவகங்களும் அரக்குமுத்திரை வைத்து மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனேடிய மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு: பணி நேரத்தில் மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version