Home முக்கியச் செய்திகள் இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு

இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு

0

கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதிக்கு பிந்தைய காசா மீதான தரைவழித் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல் (israel)இராணுவத்தில் 307 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சனிக்கிழமையன்று காசாவில்(gaza) இடம்பெற்ற மோதலில் 10 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஒரே நேரத்தில் ஏற்பட்ட பெரும் இழப்பு

இவ்வாறு இஸ்ரேல் இராணுவம் ஒரே நேரத்தில் பெரும் இழப்பை சந்தித்துள்ளமை இதுவே முதல் முறையாகும்.இது இஸ்ரேல் படையினருக்கு ஆபத்தான போரை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

300ற்கும் மேற்பட்டவர்கள் பலி

இந்த இழப்பின் மூலம் ஒக்டோபர் 27 அன்று காசா மீதான தரைப்படை நடவடிக்கை தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களின் மொத்த எண்ணிக்கையை குறைந்தது 307 ஆகக் கொண்டு வருகிறது என்று இஸ்ரேலிய இராணுவத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை போரில் காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கையும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version