Home முக்கியச் செய்திகள் நெருங்கியது ஜனாதிபதி தேர்தல்: அரச அதிகாரிகளுக்கும் வெளியான முக்கிய அறிவிப்பு

நெருங்கியது ஜனாதிபதி தேர்தல்: அரச அதிகாரிகளுக்கும் வெளியான முக்கிய அறிவிப்பு

0

ஜனாதிபதி தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட செய்தியொன்றை விடுத்துள்ளது.

இந்த நாட்டின் 9 வது நிரைவேற்று ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாளையதினம் (21) நடைபெறவுள்ளது.

இதன் படி குறித்த அறிவிப்பில்,“குறிப்பாக வாக்குப்பதிவின் போது, ​​வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் நீங்கள் நல்ல உறவில் செயல்பட வேண்டும்.

வாக்களிக்கும் திறன்

அவர்களைக் கையாளும் போது, அர்த்தமுள்ள வகையில், கனிவாகவும், பொறுமையாகவும் செயல்படுங்கள்.

எந்தவொரு நபருக்கும் சிறப்பு கவனிப்புகளை வழங்க வேண்டாம்.

அது சுதந்திரமான மற்றும் நியாயமான சூழலில் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்கும் திறன் அவர்களுக்கு உள்ளது என்பதை உறுதிப்படுத்தும்.” என கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version