Home இலங்கை அரசியல் ரணிலுக்கான ஆதரவை வெளிப்படுத்திய 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள்

ரணிலுக்கான ஆதரவை வெளிப்படுத்திய 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் 34 கட்சிகளும் கூட்டணிகளும் இணைந்து உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

குறித்த நிகழ்வானது இன்று (16) பத்தரமுல்லையிலுள்ள விருந்தகம் ஒன்றில்  (Battaramulla) இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில், “இயலும் சிறிலங்கா“ எனப்படும் குறித்த உடன்படிக்கையானது, மக்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவே கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், இது வெறுமனே ஒரு அரசியல் கட்சி அல்ல எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்

இந்த நிலையில், நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (15) வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version