Home இலங்கை சமூகம் மண்டைதீவு படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு

மண்டைதீவு படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு

0

மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவுனாள் நேற்று(26) உணர்வுபூர்வமாக
அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

35 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இராணுவத்தால் மண்டைதீவில்
நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்தில் தீவக மக்கள்
ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூரி சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்தனர்.

சம்பவம் குறித்து வாழும் சாட்சியாக

26.08.1990 ஆம் ஆண்டு தீவக பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின்
போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80
இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும்
பலர் கொல்லப்படும் இருந்தனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப்
பகுதியில் குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும்
சாட்சியங்கள் இருப்பதாகவும் பல்வேறு தரப்பினர் கூறிவரும் நிலையில் கடந்த 20
ஆம் திகதி வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் பிரகலாதன் குறித்த புதைகுழியை
அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் குறித்த படுகொலைக்கு சாட்சியான இடமாக கூறப்படும் சுமார் 50
இக்கும் மேற்பட்ட உடலங்கள் இருப்பதாக கூறப்படும் கிணறு மக்களால் அடையாளம்
காணப்பட்ட அவ்விடம் நினைவு கூரப்பட்டு வந்தது.

இதேநேரம் குறித்த சம்பவம் குறித்து வாழும் சாட்சியாக இருக்கும்
படுகொலைசெய்யப்ட்ட இருவரது தாயாரும் சகோதரியும் அன்றைய நாள் வடுக்களையும்
வேதனைகளையும் சாட்சியாக ஊடகங்களுக்கு கருத்து கூறியிருந்தனர்.

புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்றுதான்

இதன்போது கணவனையும் சகோதரனையும் இழந்த தாயார் கூறுகையில் – 1990.08.25
மற்றும் 26 ஆம் திகதிகளில் இந்த படுகொலையும் காணாமலாக்கலும் இராணுவத்தால்
அரங்கேற்றப்பட்டது.

இதில் தனது கணவரும் சகோதரனும் கைதுசெய்யப்படு இராணுவத்தால் என் கண் முன்னே கைது
செய்யப்படு எனது உறவினர் ஒருவரது வீட்டின் பின் பகுதியில் வைத்து கடும்
சித்திரவதைக்கு உள்ளாக்கினர்.

அதன் பின்னர் சுட்டுக் கொன்றனர். இந்த கோர
சம்பவத்துக்கு நான் கண்கண்ட சாட்சி.

அத்துடன் எனது சகோதரனின் மனைவியையும் இன்னொரு இளம் பெண்ணையும் கைதுசெய்து ஒரு
வீட்டுக்குள் கொண்டு சென்று சித்திரவதைக்கு உட்படுத்தினர்.

அதேபோன்று சுற்றுவட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்ட பல உடலங்களை சிலவற்றை அவ்வூர்
மக்களைக்கொண்டு சேகரித்து கிணறுகளில் போட்டு மூடினர்.

அவ்வாறு புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்றுதான் இன்று நினைவு கூரப்படும் கிணறு.

இந்த கிணறு போன்று இன்னும் சில இருக்கின்றன என கண்ணீர் மல்க கூறினார்.

NO COMMENTS

Exit mobile version