Home இலங்கை அரசியல் வேலையில்லாமல் திணறும் பட்டதாரிகள்: அரசாங்கத்தை நோக்கி தொடுக்கப்படும் கேள்வி!

வேலையில்லாமல் திணறும் பட்டதாரிகள்: அரசாங்கத்தை நோக்கி தொடுக்கப்படும் கேள்வி!

0

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் மீறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும், தேர்தல் பிரச்சாரத்தின் போது வழங்கிய வாக்குறுதிகளே இவ்வாறு அரசாங்கம் மீறியுள்ளதாக அவர் இன்று(11) தெரிவித்துள்ளார்.

தேர்தல் விஞ்ஞாபனம்

ஜே.வி.பி தலைமையிலான தேர்தல் விஞ்ஞாபனத்தில் 20,000 பேர் ஆசிரியர்களாகவும், சுங்கம், இறைவரி, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு சேவைகளில் மற்றவர்களை பணியமர்த்தவும் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், சுமார் 40,000 பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பதாக சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்டதாரிகள் கட்சியின் வாக்குப் பங்கை அதிகரிக்கப் பயன்படுத்தப்பட்தாகவும் ஆனால் தற்போது கைவிடப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர்களை வேலைக்கு அமர்த்த அரசாங்கம் தயங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் மீதான அச்சமா காரணம்? எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தியாவசியத் துறைகளில் வேலை

மேலும், வேலையற்ற பட்டதாரிகளை “அரசியல் கைப்பாவைகள் அல்ல, கற்றறிந்த மற்றும் புத்திசாலித்தனமான வளம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அவர்களுக்கு பயிற்சி அளித்து அத்தியாவசியத் துறைகளில் அவர்களை அமர்த்துமாறும் அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version