Home இலங்கை 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு 36 வருட நினைவு அனுஸ்டிப்பு

600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு 36 வருட நினைவு அனுஸ்டிப்பு

0
image

1990 ஆம் ஆண்டு 2ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானபோது கொல்லப்பட்ட 600  பொலிஸாரின் 36வது  ஆண்டு நினைவு இன்று  அனுஸ்டிக்கப்பட்டது.

அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த  நினைவு தூபியில் 11 ஆம் திகதி நடைபெற்றது.

1990 ஜூன் 11 அன்று கொல்லப்பட்ட 600 பொலிஸ் அதிகாரிகளின் நினைவாக  அமைதி என்ற பெயரில் இம்மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

 நிகழ்வின் போது  அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்ல, பொலிஸ்  உயரதிகாரிகள்,   பொலிஸார் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக 1990 ஆம் ஆaண்டு  உயிரிழந்த பொலிஸார் உட்பட யுத்தத்தினால் உயிர்நீத்த மற்றும்  கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின்  குடும்பங்களின் நலன் குறித்தும்    இதன் போது ஆராயப்பட்டன.

Source: https://samugammedia.com/36th-anniversary-of-the-killing-of-600-police-officers-1781186919

NO COMMENTS

Exit mobile version