Home இலங்கை அரசியல் மகிந்த வசமிருந்த எட்டு அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

மகிந்த வசமிருந்த எட்டு அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) வசமிருந்த எட்டு அரச வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அரசாங்க தகவல் திணைக்களம் (Department Of Government Information) தெரிவித்துள்ளது.

அத்தோடு, மேலும் எட்டு வாகனங்கள் மகிந்த ராஜபக்சவின் வசம் இருப்பதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்குள்ள உரிமைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வசம் 11 அரச வாகனங்கள் தற்போது உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 1986 ஆம் ஆண்டின் நான்காம் இலக்க ஜனாதிபதிக்குள்ள உரிமைகள் சட்டத்திற்கமைவாக மகிந்த ராஜபக்சவும் மற்றும் ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickramasinghe) தம்வசமுள்ள மேலதிக வாகனங்களை மீள ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version