Home இலங்கை அரசியல் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பதில் காவல்துறை மா அதிபர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பதில் காவல்துறை மா அதிபர்

0

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக காவல்துறை உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வில் கலந்துகொள்வதற்காக பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய (Priyantha Weerasooriya) யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் குறித்த செயலமர்வு நேற்று (19.10.2024) நடைபெற்றது.

குறித்த செயலமர்வின் போது நாடாளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள்
மற்றும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
தொடர்பாக காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பதில் காவல்துறைமா அதிபர் மேலதிக அறிவுறுத்தல்களை
வழங்கினார்.

செயலமர்வில் கலந்துகொண்டோர்

இச் செயலமர்வில் சிரேஷ்ட வடமாகாண பிரதி காவல்துறைமா அதிபர் ரி. சி. ஏ.
தனபால, பிரதி காவல்துறைமா அதிபர் றுவான் குணசேகர, பிரதி காவல்துறைமா
அதிபர் (கிளிநொச்சி) சமந்த டி. சில்வா, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. சிறிமோகனன், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் டி. எல். ஏ.
சூர்யபண்டார, காவல்துறை அத்தியட்சகர் எம். எம். சந்தன ஹமகே, உதவி காவல்துறை அத்தியட்சகர்கள், காவல்நிலைய பொறுப்பதிகாரிகள், முறைப்பாட்டு முகாமைத்துவப்
பிரிவின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் உட்பட சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திறந்து வைக்கப்பட்ட பணியகம்

இதேவேளை சாவகச்சேரி காவல் நிலையத்தில் நேற்றைய தினம் (19) சிறுவர் – மகளிர்
துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி காவல்நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில்
இடம்பெற்ற நிகழ்வில் பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த
வீரசூரிய கலந்துகொண்டு சிறுவர் மற்றும் மகளிர் துஸ்பிரயோக தடுப்புப்
பணியகத்தை திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version