Home முக்கியச் செய்திகள் தமிழர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் கட்சிகளுக்கு ஆதரவு – புலம்பெயர் அமைப்பு

தமிழர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் கட்சிகளுக்கு ஆதரவு – புலம்பெயர் அமைப்பு

0

இலங்கையிலும் (Sri Lanka) சர்வதேச அளவிலும் தமிழர் போராட்டத்திற்கான நேரடி தீர்வுகளில் கவனம் செலுத்தும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க (United States) புலம்பெயர் தமிழர்களை உலகளவில் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்க புலம்பெயர் தமிழர்கள் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, 13வது திருத்தம் மற்றும் சமஷ்டியை நாங்கள் நிராகரிக்கிறோம், அவை சிங்கள மேலாதிக்க மத்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டு செயற்படாமல் இருக்க முடியும்.

தமிழர் உரிமை

75 வருடங்களாக சிங்களத் தலைமையுடன் பலனற்ற கலந்துரையாடல்களுக்குப் பின்னர், உண்மையான முன்னேற்றத்திற்கு இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா (Australia) மற்றும் ஜப்பான் (Japan) போன்ற சர்வதேச பங்குதாரர்களுடன் – போரின் போது இலங்கையை ஆதரித்த அதே நாடுகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது முக்கியமானது.

ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே (Norway) மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய, 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைவர்கள் தமிழர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அரசியல் தீர்வுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் பொறுப்பானவர்கள்.

இந்த சர்வதேச பங்காளிகளுக்கு அரசியல் தீர்வை இலங்கை உறுதியளித்தது. இனப்படுகொலைப் போருக்குப் பிறகு, 145,000ற்கும் மேற்பட்ட கொலைகளுக்கு பிறகு உலக வழக்கப்படி சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்பது யாரும் தெரிந்ததே.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகம் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு இந்த நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ள கட்சிகளுக்கு ஆதரவளிக்க ஈழத்தில் வாழும் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 

NO COMMENTS

Exit mobile version