Home இலங்கை குற்றம் வெளிநாட்டு பெண்ணொருவரின் சந்தேகத்திற்கிடமான செயல்! பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை

வெளிநாட்டு பெண்ணொருவரின் சந்தேகத்திற்கிடமான செயல்! பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை

0

ஜெர்மன் இளம் பெண் ஒருவர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய தூதரகத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மடிக்கணினி ஒன்றை வைத்து சென்ற சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம்

சந்தேக நபரான இளம் பெண்ணிடம் மொழிபெயர்ப்பாளர் மூலம் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், மடிக்கணினியின் கடவுச்சொல்லை பொலிஸாருக்கு வழங்க அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சந்தேக நபரான இளம் பெண் சீனாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version