Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் மாபெரும் போராட்டம்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் மாபெரும் போராட்டம்

0

Courtesy: தவசீலன்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடிமறைக்க வேண்டாம் எனவும், எமக்கு
உண்மையும் நீதியும் வேண்டுமென கோரியும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மனிதப் புதைகுழிகளுக்கு நீதி விசாரணை வேண்டும் என்றும்,  காணாமல் போனோர் அலுவலகம் ( OMP) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
மீதான மேற்கொள்ளும் அச்சுறுத்தல் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று(20) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முன்றலில்
இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால்
ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கின் பல்வேறு
மாவட்டங்களினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் முன்னாள் மாகாணசபை
உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சமூக
செயற்ப்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
உண்மையை மௌனமாக்காதே, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் சாட்சிகளை
அச்சுறுத்தாதே, ,கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி, ஸ்ரீ லங்கா
இராணுவமே பொறுப்புக்கூற வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை
தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/a-great-protest-at-kokutoduvai-1724137614

NO COMMENTS

Exit mobile version