Home இலங்கை அரசியல் வெளிநாட்டு கடவுச்சீட்டு பிரச்சினையின் பின்னிணியில் செயற்படும் மாஃபியா

வெளிநாட்டு கடவுச்சீட்டு பிரச்சினையின் பின்னிணியில் செயற்படும் மாஃபியா

0

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக உருவாகியுள்ள நீண்ட வரிசையின் பின்னணியில் மாஃபியாவொன்று செயற்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் திரான்  குறித்த விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

புதிய வெற்று வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக குடிவரவு திணைக்கள அலுவலகங்களுக்கு முன்னால் நீண்ட வரிசை உருவாகியிருந்ததது.

குற்றச்சாட்டு

இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு பிரச்சினை தொடர்பில் இன்றையதினம் ஊடகவியாலாளர் சந்திப்பொன்றை நடத்திய தேசிய மக்கள் சக்தி, அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

இதன் படி, இதற்கு பதில் வழங்கும் விதத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் குறித்த பிரச்சினையின் பின்னணியில் மாஃபியாவொன்று செயற்பட்டு வருவதாக விளக்கமளித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version