Home இலங்கை குற்றம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது

0

Courtesy: Sivaa Mayuri

குருநாகல்(Kurunagala) – நாகொல்லாகம பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(13.06.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

இலஞ்சம் வழங்க முயற்சி

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை விடுவிக்க
50,000 ரூபா, இலஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இலஞ்சம் வழங்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர் ஹிரியால,
அம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் 20 மற்றும் 28 வயதுடைய, அதே பகுதியை சேர்ந்தவர்கள்
என்பதுடன் சந்தேகநபர்கள் மூவரும் இன்று(14) மஹவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version