Home இலங்கை அரசியல் சார்க் அமைப்பின் முக்கியஸ்தரைச் சந்தித்த அதிபர் ரணில்

சார்க் அமைப்பின் முக்கியஸ்தரைச் சந்தித்த அதிபர் ரணில்

0

அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் (Ranil Wickremesinghe) சார்க் (SAARC) அமைப்பின் செயலாளர் நாயகம் கோலம் சர்வார்க்கும் (Golam Sarwar) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (12) அதிபர் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை சார்க் நாடுகளுக்கு இடையிலான பல்வேறு திட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம்

இது தொடர்பில் பக்கச்சார்பற்ற தலையீடுகளை மேற்கொள்ளுமாறு சார்க் பொதுச் செயலாளரிடம் அதிபர் ரணில் கோரியுள்ளார்.

மேலும் இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் சார்க் நாடுகளிடமிருந்து பெறக்கூடிய ஆதரவு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நவீன கலைக்கான சார்க் கலாசார மையத்தை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியதாக அதிபர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க (Saman Ekanayake) மற்றும் அதிகாரிகள் குழுவொன்று கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/president-ranil-met-the-secretary-of-saarc-1718186074

NO COMMENTS

Exit mobile version